ஒரு கதை கேள் தோழி.ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிறரோமியோக்களின் கதை கேள்.காகிதப் பூக்களின் நகரத்தில்காதலில் கசிந்துதேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி.என் இனிய பட்டாம் பூச்சியே சுவர்க் காடுகளுள் தேடாதே.நான் வனத்தின் சிரிப்பு வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும்வானவில் குஞ்செனப் பாடியது பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ.ராணித் தேனீக்களே எட்டாத கோபுரப் பாறைகளில் இருந்துகம கமவென இறங்கியது அதன் நூலேணி.வாசனையில் தொற்றிவந்த வண்ணத்துப் பூச்சியிடம் இனிவரும் வசந்தங்களிலும்தேனுக்கு வா என்றது பூ.காதல் பூவே வசந்தங்கள்தோறும்ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிறபட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில்உலகம் தழைத்தது.நிலைப்ப தொன்றில்லா வாழ்வில் கடக்கையில் பெய்கிற முகிலே உறவுகள்.
Saturday, May 3, 2008
lovers day spl
வர வேண்டும் அவள்
கதவைத் திறந்து வைக்கிறேன்காற்று மெல்ல நுழையுதுகாற்றில் அவளின் நறுமணம்மூச்சில் நிறைத்துக் கொள்கிறேன் கனவில் வந்து சிரிக்கிறாள்கண்கசக்கி அழுகிறாள்நிஜத்தில் தொலைவில் இருக்கிறாள்நெருங்கி என்று வருவளோ?காற்றில் ஆடும் இறகுபோல் - மனம்ஓர் இடத்தில் இல்லையே!இரவு மிகவும் நீளுதே! - இந்தத்தனிமை என்னைக் கொல்லுதே!அருகிருந்த போதிலே - மனம்அமைதி கொண்டிருந்தது!தொலைவில் சென்று விட்டதும்துவண்டு மிகவும் ஏங்குது!போதும் இந்தத் தண்டனைபூவே இங்கு வந்திடுஉனது மழலைக் குறும்புகள்ஒவ்வொன்றாக நிகழ்த்திடு!வலிக்காமல் என்னைக் கிள்ளடி - உன்மெல்லிதழால் செல்லமாய்க் கடி.வலிக்குமாறு கட்டிக் கொள்ளடி - உன்முத்தத்தாலே என்னை மூழ்கடி!
lovers day spl
காதலை அறியாக் காதலர்
அவளையே நினைத்து உருகுகையில்அவளே வந்தாள் - ஆகாஇனியேது கவலையென்றதுஅவனின் உள்ளம் பாவம்!அவளின் ஆணவப் பார்வையோ கோடீஸ்வரனின் துணையிருக்க, தனக்கேது கவலையென்றது!காதல் என்ற உண்மையை உணராதவள்தாலி என்ற புதிய தங்கத் துண்டிற்காவதுமரியாதை செலுத்தட்டுமே எனவாழ்த்தினது அவனின் அன்புள்ளம்!காமத்தால் கொச்சைப்படுத்தியும்பொருளாதார எடைமேடையால்தரம் பார்த்தும் தன்னை அசிங்கப்படுத்தி மகிழும்காதலை அறியாக் காதலர் பலரின்இன்றைய விளையாட்டால்கவலையில் வாடுகிறதே காதல்!
Subscribe to:
Posts (Atom)